அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், ‘‘சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வருவது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்து வருகிறது. குறிப்பிட்ட கால நேரத்திற்குள் திட்ட அனுமதிக்கு முறையாக ஆவணங்களை சமர்ப்பிப்பது தாமதமாவதால் அனுமதி அளிக்க காலதாமதமாகிறது’’ என்றார். வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டியில், தமிழகத்தை பொறுத்தவரை 8 இடங்களில் மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. 7 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 19 சதவீதமாக மாறி உள்ளது.
அதை 22 சதவீதம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை தனியார் வசம் கொடுக்க உள்ளதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் தனியார் குடியிருப்புகளை விட விலை குறைவாக தான் உள்ளது. தற்போது வரை வீட்டு வசதி வாரியத்தில் விற்காமல் 3000 வீடுகள் உள்ளன. அதை விற்பதற்கான நடவடிக்கையை எடுத்து கொண்டு வருகிறோம். மேலும், விற்காத வீடுகளை வாடகை விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.
The post வீட்டுவசதி வாரியத்தில் விற்காமல் உள்ள 3,000 வீடுகளை வாடகைக்கு விட நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.