மலப்புரத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் நடத்தி வந்த பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நடந்தது. வெடி விபத்து சம்பவத்தின் போது மொத்தம் ஒன்பது பேர் சம்பவ இடத்தில் இருந்தனர். மூன்று பேர் பலியான நிலையில், காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடல்கள் சுமார் 100 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன. பட்டாசு ஆலையின் உரிமையாளரை தேடி வருகிறோம்’ என்றனர்.
The post கர்நாடகாவில் சோகம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி appeared first on Dinakaran.