போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்தவர் வெள்ளூரைச் சேர்ந்த கண்ணன் (50) என்பதும், பக்கத்து தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மகேஸ்வரன் தோட்டத்தில் உரிய அனுமதி இன்றி ஷெட் அமைத்து பேன்சி ரக பட்டாசு தயாரித்து பதுக்கியிருந்ததும், தோட்டத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் பட்டாசு மூலப் பொருட்கள் குவிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ஆமத்தூர் போலீசில் வெள்ளூர் விஏஓ மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தோட்ட உரிமையாளர் மகேஸ்வரன் மீது ஏற்கனவே அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பட்டாசு வெடித்து காவலாளி பலி appeared first on Dinakaran.