இதனால், டூவீலர் முன்னால் நின்ற பால் லாரியில் மோதியது. இரண்டு வாகனங்களின் நடுவே சிக்கிக் கொண்டதில், அழகரசன், இளமதி ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் சமயபுரம் முத்துராஜா தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் என்பவரை, கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இரண்டு லாரிகளுக்கு இடையில் தம்பதி டூவிலருடன் சிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
The post லாரிகளுக்கு இடையில் சிக்கி தம்பதி சாவு: 2 குழந்தைகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.