‘ஆளுநர் ரவிக்கு மனநலம் பாதிப்பு’

புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேச ஒற்றுமைக்கான ராகுலின் யாத்திரையை அசாம் மாநிலத்தில் வழிமறித்து, தடுத்து குந்தகம் விளைவிக்கும் வகையில் பாஜவினர் நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, காந்தியடிகளால் நாடு சுதந்திரம் பெறவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் கிளர்ச்சியால்தான் வந்தது எனக்கூறியுள்ளார்.

ஆளுநர் இந்திய சரித்திரத்தை படிக்கவில்லையா?. காந்தியின் அறப்போராட்டத்தால், விடுதலை கிடைத்த சக்தியை இந்த உலகமே பாராட்டுகிறது. ஆளுநர் ரவி மனநலம் பாதித்தவர் போல் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார். சரித்திரத்தை மாற்றி எழுத பார்க்கிறார். காந்தியின் அறப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘ஆளுநர் ரவிக்கு மனநலம் பாதிப்பு’ appeared first on Dinakaran.

Related Stories: