மக்களவை தேர்தலில் ராகுல் யாத்திரை சென்ற தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும்: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கருத்து

கவுகாத்தி: அசாமில் ராகுல் காந்தி யாத்திரை சென்ற தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்பட்ட நாளில் அசாமில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் நாகோன், மோரிகான் ஆகிய மாவட்டங்களில் வகுப்புவாத கலவரத்தை தூண்டுவதற்காக தேர்ந்தெடுத்தார்.

கும்பாபிஷேக நாளில் அசாமில் யாத்திரை செய்வது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க நினைக்கும் அரசியல் சதி. அசாமில் ராகுல் யாத்திரை சென்ற மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜ நிச்சயம் வெற்றி பெறும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

 

The post மக்களவை தேர்தலில் ராகுல் யாத்திரை சென்ற தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும்: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கருத்து appeared first on Dinakaran.

Related Stories: