அதனை திறந்தால் மேலும் பல கோடி சொத்துக்களுக்கான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், நிலையான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், 60 விலை உயர்ந்த வாட்சுகள், 14 ஸ்மார்ட் போன்கள், 10 லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஐதராபாத் சுற்று பகுதியில் பல ஏக்கரில் நிலம், வில்லா, பிளாட்கள் என அவர் சொத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவபாலகிருஷ்ணாவின் வீட்டில் பணம் எண்ணும் இயந்திரங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சொத்துக்கள் அனைத்தும் (ஹெச்எம்டிஏ) ஐதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் இயக்குநராக இருந்ததில் இருந்து தற்போது வரை சேர்த்திருப்பது தெரியவந்தது.
The post ஐதராபாத்தில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசு அதிகாரி வீட்டில் 2 கிலோ தங்கம் பறிமுதல்: 300 கோடி ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.