இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் மாதத்திற்குள் மேல்முறையீட்டு வழக்கை முடித்திட உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தொடர்ந்து நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கில் வாதாடுவதற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் முன்வராத நிலையில் இறுதிவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், வரும் 29ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டுமென கூறிய நீதிபதி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை மாஜி டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு வரும் 29ம் தேதி கடைசி வாய்ப்பு: கண்டிப்பாக ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.