அதன்படி விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடல் அருகே ஒரு பை கிடந்தது. அதில், கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் புதிய துணிகள் தைப்பதற்கு கொடுத்த ரசீதுகள் இருந்தன. அதை வைத்து விசாரணை நடத்திய போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆரீந்தகுமார் (32) என்று தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது உடல் கைப்பற்றப்பட்ட இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மைதானம் அருகே உள்ள முத்துசாமி மேம்பாலம் வழியாக வடமாநில வாலிபர் வரும் காட்சி பாதிவாகி இருந்தது. அவர் மது போதையில் தள்ளாடி மேம்பாலத்தின் ஓரம் அமர்ந்து இருந்ததும், பிறகு எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது போன்றும் காட்சிகள் பதிவாக இருந்தது.
இருந்தாலும், வடமாநில வாலிபர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் இறந்து கிடந்த நபர் குறித்து முழு தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
The post சென்னை மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜார்க்கண்ட் வாலிபர் அடித்து கொலையா?..சிசிடிவி காட்சிகள் ஆய்வு appeared first on Dinakaran.