கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கைது

கோவை: கோவை ஆலந்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பிரதீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலந்துறை அடுத்த உரிப்பள்ளம் புதூரில் கவுதம் என்பவரின் தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஆலந்துறை போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்ததை அடுத்து கவுன்சிலர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக கவுன்சிலருடன் கனகராஜ், செல்வம், கந்தசாமி, மாரியப்பன், ராஜசேகரன், கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கவுன்சிலருடன் கைதுசெய்யப்பட்ட மற்றவர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

The post கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: