படியுங்கள்

கரூர்: பிளாஸ்டிக் மாற்றாக மஞ்சப்பை ஊக்குவித்த சிறந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விருது வழகப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மே 1ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என்று கருர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், சட்டபேரவையில் நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

The post படியுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: