நகைக்கடை ஊழியர் திடீர் சாவு

தர்மபுரி, ஜன.23: தர்மபுரி ஹரிகரநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் (60). இவர் தர்மபுரி டவுனில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் குப்புராஜ் நடைக்கடையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சக ஊழியர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குப்புராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நகைக்கடை ஊழியர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: