பைக் மோதி நடந்து சென்ற சிறுவன் காயம்

கிருஷ்ணராயபுரம், ஜூன் 16: கிருஷ்ணராயபுரம் அருகே சரவணபுரம் பகுதியில் சாலையில் நடந்த சென்ற சிறுவன் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் ஊராட்சிக்குட்பட்ட சரவணபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(30). இவரது 6 வயது மகன் மகேஸ்வரன் கடந்த 13 ஆம் தேதி அய்யர் மலை- சரவணபுரம் சாலையில் நடந்து செல்லும் போது அதை உரை சேர்ந்த சங்கர் ( 31) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக் மோதி நடந்து சென்ற சிறுவன் காயம் appeared first on Dinakaran.

Related Stories: