நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம் கழுத்து இறுக்கி கொலையா? போலீஸ் விசாரணை

நாகர்கோவில், ஜன.23: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் சடலமாக மிதந்தார். இது குறித்து, கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்ைத மீட்டனர். இறந்து கிடந்தவருக்கு 55ல் இருந்து சுமார் 60 வயதுக்குள் இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர் பேன்ட்ஸ், சட்டை அணிந்திருந்தார். சோதனை செய்ததில், எந்த வித தடயங்களும் இல்லை. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்தவரின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இருந்தது. கயிற்றால் கழுத்தை இறுக்கி குளத்துக்குள் விழுந்து தற்கொலை செய்து இருப்பாரா? அல்லது அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து குளத்துக்குள் தள்ளினார்களா? என்பது தெரியவில்ைல பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே இறப்பு எப்படி நடந்தது என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர். குமரி மாவட்டத்தில் சமீப காலமாக குடிபோதையில் தகராறுகள் நிகழ்ந்து, கொலையில் முடிந்து வருகிறது. அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் போதை காரணமாக நிகழ்ந்து உள்ளன. எனவே இரவில் குடிபோதையில் யாராவது இவரை தாக்கி கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம் கழுத்து இறுக்கி கொலையா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: