கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு – கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வரும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், காலப்போக்கில் இங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது முற்றிலுமாக நின்று விடும் ஆபத்து உள்ளது. ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள், பறவைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன் கருதி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் பாமக நடவடிக்கை எடுக்கும்.
The post இயற்கை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும்: துறை செயலாளர், கலெக்டருக்கு அன்புமணி கடிதம் appeared first on Dinakaran.