கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்கக் கூடாது: ஐகோர்ட்

சென்னை: கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எந்த பாதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் வாழ்நாள் அறங்காவலர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்கக் கூடாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: