மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி, தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பெரியாம்பட்டி பகுதியில் இருந்து இணைப்பு பகுதியில், விபத்துக்கள் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இப்பகுதியில் உயர் மட்டம் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரியாம்பட்டி பிரிவு சாலையில், மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் சுங்க சாவடி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, விஏஓ முருகன், சர்வேயர் பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: