பாராட்டு விழா

கூடலூர், ஜன. 21: கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர் கண்ணன். ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் டிஐஜியாக பொறுப்பு ஏற்றுள்ளார். இந்நிலையில், கம்பம் புதுப்பட்டி வந்த டிஐஜி கண்ணனுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதையடுத்து கம்பம் புதுப்பட்டி கிராமத்தில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, மற்றும் போலீசார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: