ராஷ்மிகா மந்தனா டீப்பேக் வீடியோ வௌியிட்டவர் கைது

புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ கடந்த நவம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காட்சியை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வௌியிட்ட ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த நவீன் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராஷ்மிகா மந்தனா டீப்பேக் வீடியோ வௌியிட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: