அதில், பால் மெக்கென்சியும், அவரது சீடர்களும் இணைந்து 191 குழந்தைகள் உட்பட 429 பேரைக் கொன்றதாக பகீர் தகவல் கிடைத்தது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பால் மெக்கென்சி மற்றும் அவரது சீடர்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கென்யாவின் கடலோர நகரமான மலிண்டியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உயர் நீதிமன்ற நீதிபதி முகுரே தாண்டே பிறப்பித்த உத்தரவில், ‘பால் மெக்கென்சி உள்ளிட்டோருக்கு உளவியல் ரீதியான சோதனைகளை நடத்த வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதி, கைதானவர்களின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, கொலை செய்யப்பட்ட 191 குழந்தைகளில் 180 குழந்தைகளின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஷகாஹோலா வனம் என்று அழைக்கப்படும் 800 ஏக்கர் பண்ணையில் டஜன் கணக்கான கல்லறைகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சில உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த போது, பலரை பலவந்தமாக கொன்றது தெரியவந்துள்ளது. கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 429 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post உலகம் அழியும் முன் உண்ணாவிரதம் இருக்க வலியுறுத்தி 191 குழந்தைகள் உட்பட 429 பேரை கொன்ற மத போதகர்: கென்யா நாட்டில் பயங்கரம் appeared first on Dinakaran.