மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி கைது

சென்னை : சென்னை ஆர்.கே.சாலையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். மதுபோதையில் வங்கி அதிகாரி மது சந்திரஜா (42) ஓட்டிச் சென்ற கார், பேட்டரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் மீது கார் மோதியதில் முன்னால் நின்ற மற்றொரு காரின் கண்ணாடியும் உடைந்தது. விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரியை கைது செய்தனர்.

The post மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: