தேசிய நுகர்வோர் தின விழா

 

தேனி, ஜன. 20: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் மன்றம் சார்பில், உணவு கலப்பட கண்காட்சி மற்றும் உணவு கலப்படம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி நுகர்வோர் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுசீலாசங்கர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணை செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லூரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி ஆகியோர் பேசினர். இதில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் புதுராசா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியின்போது நுகர்வோர் தின கண்காட்சி நடத்தப்பட்டது.

The post தேசிய நுகர்வோர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: