கோவில்பட்டி கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

கோவில்பட்டி, ஜன. 19: தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுவாமி விவேகானந்தரின் 126வது பிறந்த தினம், தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுப்புராஜ் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி விவேகானந்தர் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ஹேமலதா வரவேற்றார். மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். கல்லூரி மாணவ- மாணவிகளின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பேச்சுப் போட்டி, கிராமிய நடனம், கிராமிய பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வணிகவியல் துறை உதவி பேராசிரியை கீதாராணி நன்றி கூறினார்.

The post கோவில்பட்டி கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: