தண்டுபத்து பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருச்செந்தூர், ஜன. 18: தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சரஸ்வதி கந்தசாமி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் அனிதா குமரன் தலைமை வகித்து பொங்கலிட்டார். பள்ளியின் முதல்வர் மீனா, நிர்வாக அதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்தி ஜெயஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

The post தண்டுபத்து பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: