ஆறுமுகநேரியில் பஜனை வீதியுலா நிறைவு

ஆறுமுகநேரி, ஜன. 18: ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் நடராஜர் கோயில், விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கம், வடக்கு சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோயில், பேயன்விளை வடபத்ரகாளி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதியுலா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. பேயன்விளையில் நடந்த நிகழ்ச்சிக்கு பஜனை குழு அமைப்பாளர்கள் பரமகுரு, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜனையில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் புத்தாடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வடபத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகி ஹரிதாஸ், மகா கிருஷ்ணன், தொழிலதிபர் பால்ராஜ், மந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் செய்திருந்தார்.

The post ஆறுமுகநேரியில் பஜனை வீதியுலா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: