இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் அமர்பு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “ஆண்டுதோறும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே உயிரிழப்போர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை ஆண்டுதோறும் அதிகரிக்க முடியுமா என்பதை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் விபத்து இழப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு விரிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
The post அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.