பிஎஸ்ஆர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சிவகாசி, ஜன. 14: சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் சார்பில் கல்லூரி வளாகத்தில் நேற்று பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஆர். கல்லூரி, பி.எஸ்.ஆர்.ஆர்.கல்லூரி, பி.எஸ்.ஆர். கலைக்கல்லூரி, பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கல்விக்குழுமங்களின் இயக்குனர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

The post பிஎஸ்ஆர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: