இதுகுறித்து கரும்பு வியாபாரி சந்திரா கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விவசாயிகளிடம் ஏக்கர் கணக்கில் மொத்தமாக கரும்பை விலை பேசி, கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி 20க்கும் மேற்பட்ட லாரியில் எடுத்துவந்து கரும்புகளை பிரித்து கடை போட்டு உள்ளோம். ேரஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இலவசமாக வழங்குவதால் தற்போது கரும்பு விற்பனை மந்தமாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் விற்பனை சூடு பிடிக்கும். வாகனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு வாங்கும்போது விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பொங்கல் பண்டிகையையொட்டி நாமகிரிப்பேட்டையில் செங்கரும்பு குவிப்பு: ஜோடி ரூ.80க்கு விற்பனை appeared first on Dinakaran.