அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.13: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர்கள் மாரி கருணாநிதி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: