தங்கப்பழம் கல்லூரியில் உலக முதலீட்டாளர் மாநாடு காணொலி காட்சி

நெல்லை, ஜன. 13: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலின்படி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. காணொலி காட்சியை கல்லூரி கூட்டரங்கில் “நான் முதல்வன்” திட்டம் மூலமாக சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். இதில் தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் தங்கப்பழம், தாளாளர் முருகேசன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் அலுவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தங்கப்பழம் கல்லூரியில் உலக முதலீட்டாளர் மாநாடு காணொலி காட்சி appeared first on Dinakaran.

Related Stories: