இந்நிலையில், செல்வகுமார் நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தார். அதில், சீனிவாசனும், பிரமிளாவும் பங்குதாரர்களின் பங்குகளை போலி கையெழுத்து போட்டு வங்கியில் கடன் பெற்று புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியது தெரியவந்தது. இதன்மூலம், இருவரும் பங்குதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குதொகை ரூ.75 கோடியை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன்,பிரமிளா மற்றும் 2 தனியார் வங்கி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post போலி கையெழுத்து போட்டு தம்பதி ரூ.75 கோடி மோசடி appeared first on Dinakaran.