இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதனை கேட்டு அதிர்ச்சியில் வெளியில் வந்த பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில், அவர்களுக்கு கை, கால்கள் முறிந்தது. 2 பேரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் நேற்று திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை என தீர்ப்பு 2வது மாடியில் இருந்து குதித்து 2குற்றவாளிகள் தற்கொலை முயற்சி: திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.