நிகில் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க கோரி அவரது வழக்கறிஞர் நியூயார்க் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த 8ம் தேதி இதை விசாரித்த நீதிபதி இதில், 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான அரசின் பெடரல் வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,நிகில் குப்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது,மட்டுமே தகவல்களை வழங்குவதாக தெரிவித்தனர்.
The post சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி வழக்கில் ஆதாரங்களை குற்றவாளிக்கு தர அமெரிக்கா எதிர்ப்பு appeared first on Dinakaran.