இதன் காரணமாக பொங்கலை (ஜன.15ம் தேதி) ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான ஜன.18ம் தேதி முதல் 31ம் தேதி வரை வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
The post ஜன.18 முதல் 31ம் தேதி வரை: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.