நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நாசிக்: நாசிக்கில் 27வது தேசிய இளைஞர்கள் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் திருவிழா (யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது. விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து மண்டல கமிஷனர் ராதாகிருஷ்ண காமே நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

‘இளைஞர் திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் கிட்டத்தட்ட முடித்து விட்டனர். விழாவுக்கு வரும் இளைஞர்களுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 2,200க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: