ராமர் கோயில் திறப்பு விழா மூலம் வித்தை காட்டுகிறது பாஜ: மம்தா குற்றச்சாட்டு

ஜாய்நகர்: ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியின் மூலம் பாஜ வித்தை காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் ஜாய்நகரில் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘’அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களையும் அரவணைத்து ஒற்றுமையை பற்றி பேசும் பண்டிகைகளை நம்புகிறேன். ஆனால் பாஜ நீதிமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பு ராமர் கோயிலை திறந்து வைப்பதாக வித்தை காட்டுகிறது. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க பார்க்கிறது. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க கூடாது என்றார்.

The post ராமர் கோயில் திறப்பு விழா மூலம் வித்தை காட்டுகிறது பாஜ: மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: