அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஜனித் லியனகே மட்டும் நிதானமாக ஆடி 127 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அவர் 43-வது ஓவரில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த துஷ்மந்தா மற்றும் ஜெப்ரி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தாக்குப்பிடித்து ஆடினர். இறுதியில் 49 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இறுதிவரை ஜிம்பாப்வே அணி வீரர்கள் போராடியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.
The post 2வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை போராடி வென்றது இலங்கை appeared first on Dinakaran.