பிரேமலதாவை நேரில் சந்தித்து ஒன்றிய அமைச்சர் ஆறுதல்

சென்னை: பிரேமலதா விஜயகாந்தை நேற்று நேரில் சந்தித்து ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் ஆறுதல் கூறினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், எல்.கே.சுதீஸ் ஆகியோரை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் சந்தித்து விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் கூறி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைசர் பியூஸ் கோயல், ‘‘விஜயகாந்த் எனது நல்ல நண்பர். இங்கு அவரை பலமுறை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். விஜயகாந்திடம் தமிழ்நாடு குறித்தும், தமிழக மக்கள் குறித்தும், அரசியல் சூழல் குறித்தும் நிறையக் கற்றுள்ளேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக விஜயகாந்த் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துவார்,’’ என தெரிவித்தார்.

The post பிரேமலதாவை நேரில் சந்தித்து ஒன்றிய அமைச்சர் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: