2300 மூட்டை பருத்தி ₹55 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஜன.7: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,300 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பிடி ரகம் குவின்டால் ₹6,069 முதல் ₹7,319 வரையும், கொட்டு ரகம் ₹3,169 முதல் ₹4809 வரையும் ஏலம் போனது. மொத்தம் 2300 மூட்டை பருத்தி, ₹55 லட்சத்திற்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

The post 2300 மூட்டை பருத்தி ₹55 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: