இதுகுறித்து அண்ணா பல்கலை டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பு: எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற மார்ச் 9ம் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு மதியமும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 10ம் தேதி காலை நடைபெறும். தமிழகத்தின் 14 நகரங்களில் தேர்வு நடக்கும். டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு 10ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். கூடுதல் தகவல்களை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
The post டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வு வருகிற 10ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு appeared first on Dinakaran.