தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை தேடி தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றனர். அப்போது சிறுமி துடிதுடித்த நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பந்தலூர் சுற்று வட்டாரத்தில் இரு வாரத்தில் சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று சிறுமி பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பந்தலூர் பஜாரில் அனைத்து கடைகளையும் அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேங்கோரேஞ், அய்யம்பள்ளி, சேரம்பாடி ஆகிய பகுதிகளிலும் மக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். இதேபோல், பந்தலூர் அருகே உள்ள படசேரி ஏலக்குமார் என்பவரது மனைவி மஞ்சுளா (27) வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை தாக்கியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
The post சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.