முதலில் 2 நாள் பயிற்சி ஆட்டம் ஜன.12,13 தேதிகளில் அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் பி மைதானத்திலும், அடுத்து 4 நாள் பயிற்சி ஆட்டம் (ஜன. 17-20) மோடி அரங்கிலும் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோதவுள்ள இந்தியா-ஏ அணியை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அணியில் மொத்தம் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா-ஏ: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் பத்திதார், சர்பராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், புல்கிட் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவெரப்பா, துருவ் ஜுரெல் (கீப்பர்), ஆகாஷ் தீப்.
The post இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா-ஏ அணி அறிவிப்பு appeared first on Dinakaran.