புதர் மண்டி கிடக்கும் விற்பனை கூடம்

 

உடுமலை, ஜன.5: மடத்துக்குளத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வேளாண்மை அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலகம், வேளாண் பொறியியல்துறை அலுவலகம், மலைப் பயிர்கள் துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், குடோன் உள்ளிட்டவை உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்வுதளம் உள்ளது.

ஆனால் இதனை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் இந்த சாய்வு தளத்தை பயன்படுத்த முடியவில்லை. மேலும், புதர் மண்டி கிடப்பதால் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. எனவே, புதர்களை வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என இங்கு வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதர் மண்டி கிடக்கும் விற்பனை கூடம் appeared first on Dinakaran.

Related Stories: