லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. சாகசம் செய்ய விரும்புவோருக்கு, லட்சத்தீவு உங்கள் பட்டியலில் இருக்க வேண்டும். நான் தங்கியிருந்த காலத்தில், நானும் கடலுக்கு அடியில் நீச்சல் அடித்துச்செல்ல (ஸ்நோர்கெல்லிங்) முயற்சித்தேன். அது என்ன ஒரு உற்சாகமான அனுபவம். இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்தது.
அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்களும் தூய்மையான ஆனந்தத்தின் தருணங்களாக இருந்தன. லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
* வெவ்வேறு உடைகளில் படம் எடுக்கிறார் மோடி
லட்சத்தீவு கடற்கரையில் பிரதமர் மோடி எடுத்த படங்கள் குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் 8 மாதங்களாக எரிகிறது. மக்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள், வீடற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள். ஆனால்… இந்தியப் பிரதமர் எங்கே? நீங்களே பாருங்க.
இந்திய பிரதமர் வேடிக்கை பார்க்கிறார். கடற்கரையில் பிரமாண்ட புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அற்புதமான போஸ் கொடுக்கப்படுகிறது. சில நேரம் கரையில் இளைப்பாறுவது, சில நேரம் கடல் அலைகளுடன் விளையாடுவது. வேடிக்கையிலும் இது வேடிக்கையானது. பிரதமர் மோடி, பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் கலையில் வல்லவர். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது.
The post லைப் ஜாக்கெட் அணிந்து லட்சத்தீவு ஆழ்கடலில் மோடி நீச்சல்: டிவிட்டரில் வண்ணப்படங்களை பதிவிட்டார் appeared first on Dinakaran.