இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார்; விஜயகாந்த் உடனான திரையுலக அன்பவங்களை பகிர்ந்து கொண்டார். கலைஞரின் கலையுலக பொன்விழாவை விஜயகாந்த் தனி ஒரு ஆளாக முன்நின்று பிரமாண்டமாக நடத்தி முடித்ததாக சிவகுமார் நினைவு கூர்ந்தார்.
விஜயகாந்த் பங்கேற்கும் படப்பிடிப்பு தளமும், அன்னதான இடமாக மாறி விடும் என நடிகர் கார்த்திக் நெகிழ்ச்சி தெரிவித்தார். கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நடிகர் சங்கத் தேர்தலில் சவால் வரும் போதெல்லாம் விஜயகாந்தை நினைக்க தவறுவதில்லை என்று கூறிய கார்த்திக், அவர் மறைவுக்கு வருகின்ற 19ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் துயரமாகிவிட்டதாகவும், அவர் எப்போது எங்கள் மனதில் இருப்பார் என்றும் கார்த்தி உருக்கமாக தெரிவித்தார்.
The post இறுதி நிகழ்வில் பங்கேற்காதது வாழ்நாள் துயரமாகிவிட்டது.. ஜன.19ல் நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம்: நடிகர் கார்த்தி appeared first on Dinakaran.