பேரணாம்பட்டு, ஜன.4: பேரணாம்பட்டு அருகே தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேனில் கடத்தி சென்ற 210 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 60 கிலோ பருப்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ேவலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துக்கோயில் பேருந்து நிலையம் அருகே தாசில்தார் சுரேஷ்குமார், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடியாத்தத்தில் இருந்து வி.கோட்டாவிற்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற மினிவேனை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தக்காளி லோடு இடையே 5 மூட்டைகளில் பதுக்கி ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் 210 கிலோ ரேஷன் அரிசி, 60 கிலோ பருப்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை பறிமுதல் செய்தனர். மேலும், வேன் டிரைவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இர்பான் என்பவரை பிடித்து இன்ஸ்பெக்டர் வனிதாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இர்பானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வேனை டிஆர்ஓவிடமும், ரேஷன் பொருட்களை குடியாத்தம் நுகர்பொருள் வாணிப கிடங்கிலும் ஒப்படைத்தனர். கடத்திச்சென்ற ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி, பருப்பு பறிமுதல் பேரணாம்பட்டு அருகே பரபரப்பு தக்காளி லோடு இடையே பதுக்கி எடுத்துச்சென்றபோது appeared first on Dinakaran.