₹1.80 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மல்லசமுத்திரம், ஜன.4: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. கருமனூர், கூத்தம்பாளையம், கூத்தாநத்தம், ராமாபுரம், வடுகபாளையம், பாலமேடு, மாமுண்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 80 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,030 முதல் ₹7,275 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,340 முதல் ₹7,330 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,380 முதல் ₹4,980 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 80 மூட்ைட பருத்தி, ₹1.80 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹1.80 லட்சத்துக்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: