விகேபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா

விகேபுரம், ஜன. 3: விகேபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள் புத்தாடைகள் வழங்கினார். விகேபுரம் நகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 80 பேருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post விகேபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: