கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு ஜன.7ல் எழுத்து தேர்வு

தூத்துக்குடி, ஜன.3: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவுச்சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எழுத்துத்தேர்வானது 7-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் 1 மணிவரை தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரபேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச்சீட்டினை 2-01-2024 முதல் தூத்துக்குடி மாவட்ட ஆள்ேசர்ப்பு நிலையத்தின் www.drbtut.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் வெ.முரளிகண்ணன் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு ஜன.7ல் எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: