இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உம்ராபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரமேஷை தேடி வந்தனர். அரங்கல்துருகம் அருகே ரமேஷ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அரங்கல்துருகம் சென்ற போலீசார், அங்கு மறைந்திருந்த ரமேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆம்பூர் அருகே 8ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது appeared first on Dinakaran.